Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : விதவைக்கு விடிவு

உறவுகொள்ள நாடுகின்றவன்

உரிமைகொள்ள ஓடுகின்றான்!

 

கொள்ளென்றால் கொள்வதும்

கடிவாளம் கக்குவதும்

குதிரைக்கு மட்டுமல்ல

கொடியர்க்கும் வழக்கம்!

 

அடுத்தவள் கணவனை

அடையத் துடித்து

ஆண்டாள் பாடியது

திருப்பாவை!

கணவனை இழந்தவள்

மறுமணம் முடிக்க

‘அய்யா’ பாடியது

தெருப்பாவை!

 

சூடிக் கொடுத்தாளை

நாடிய கண்ணன்

மனைவி யிருக்க

மறுமணம் முடித்தது

தாழ்நிலை யாகும்

கீழ்நிலை யாகும்!

சூடிய மாலையை

நாடிச் சூடிட

தாடிப் பெரியார்

பாடிய தத்துவம்

பாழ்நிலை போக்கும்

வாழ்நிலை யாக்கும்!

 

– மஞ்சை வசந்தன்