Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புரட்சி என்பது மக்களின் மனமாற்றம் !

 

 

புரட்சி என்பதை வாளைத் தூக்கிக்கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள். அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பாஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெருகிறேன். அதேபோல் சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.

(23.12.1992, திரு. வி.பி.சிங்,  மேனாள் இந்தியப் பிரதமர், திருச்சி பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழா)