Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

18 வயதுக்குட்பட்ட பெண் மனைவியானாலும் உடலுறவு பலாத்காரமே!

இந்திய தண்டனைச் சட்டம் 375இன்படி பெண்களை பலாத்காரம் செய்வது குற்றம். ஆனால், இதில் பிரிவு 2இல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இண்டிபென்டன்ட் தாட்ஸ்’ எனும் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் அரசு வழக்குரைஞர் கலாச்சார நடைமுறைகளை அறிந்தே சுய தெளிவுடன் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வாதாடினார். ஆனால், இது பெண் குழந்தைகளின் உரிமைக்கு எதிரானது என்றும், இது குழந்தைத் திருமணங்களை ஊக்குவிக்கும் என்றும் எனவே, 18 வயதுக்குள் உள்ள திருமணமான பெண்ணுடன் உறவு கொள்வது குற்றமே என்றும், பாலியல் பலாத்கார சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.