பேராசிரியர் மு.நீ. சிவராசன் அவர்கள் திராவிட இயக்கத்தைச்
சேர்ந்த கல்வியாளர். மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்று முழு நேரமாக பெரியார் திடலில் கொள்கை பணியாற்றியவர். பெரியார் பயிலகம், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகம் ஆகியவற்றின் இயக்குநராக பணியாற்றியதுடன் புத்தக வெளியீட்டுப் பணிகளில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். கழக ஏடுகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்.
