நமது அத்யந்த நண்பரும் உள்ளும் புறமும் பரிசுத்தத் தன்மையுடையவருமானவர் தோழர் ஆனைமலை ஏ.என்.நரசிம்மன் பி.ஏ.அவர்கள்.
இயக்கத்திற்காகவே தன்னை முழுதும் அர்ப்பணம் செய்துகொண்டவர். இயக்கச் சார்பில் எந்தக் கிளர்ச்சி நடைபெற்றாலும் அந்தக் கிளர்ச்சிக் காலத்தில் முன்நின்று நடத்தியவராக இருந்ததோடு, தான் முந்துறும்’ வீரராகவும் அவர் இருப்பதுண்டு.
ஓர் உண்மையான பகுத்தறிவுவாதி, சுயமரியாதைக்காரர் எப்படி இருப்பார் என்பதை வாழ்ந்து காட்டியவர்.
– தந்தை பெரியார்
