தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடலூரில் தொடக்கக்கல்வி பயின்றபோது, அவருக்கு ஆசிரியராய் இருந்தவர் இவர். மாணவர்களுக்கு பள்ளிக் கல்வியுடன் பகுத்தறிவையும் ஊட்டிய சுயமரியாதை வீரர். சாரங்கபாணி என்ற பெயரை மாற்றி வீரமணி என்று பெயர் சூட்டி, பெரியார் கொள்கைக்கு அவரைக் கொண்டு வந்தவர் இவரே.


