Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுக்கிடுவோம் பகுத்தறிவு அரிவாள்!

பூமியினைப் பாயாகச் சுருட்டி – அசுரன்

புகுந்தானாம் ஆழ்கடலின் இருட்டில்!

சாமியொன்று பன்றியாகிப் பூமியினை மீட்டதுவாம்!

கோமியத்தைக் குடிப்பார்பொய் உருட்டில் – தமிழர்

கெட்டழிந்தார் தீபாவளிப் புரட்டில்!

 

பூமியென்ன தட்டையான பாயா? கடலும்

பூமிகொண்ட பாகமில்லை யாடா?

பூமியினைச் சுருட்டுகையில் புரட்டியவன் எங்குநின்றான்?

பூகோளம் அறியாத மூடா! பெரியார்

கேள்விகட்குப் பதிலளிக்க வாடா!

 

கடவுள்செய்த வேலையினைப் பாரு! – முகத்தில்

காரியுமிழ்ந்(து) ஏசிடுமே ஊரு!

ஜடப்பொருளாம் பூமியுடன் பன்றிக்கடவுள்  புணர்ந்ததுவாம்!

உடன்பிறந்தான் நரகாசுரன் என்று – பார்ப்பான்

ஓதிவைத்தான் புனைசுருட்டை அன்று!

 

மகாவீரர் இறந்துபட்ட நிகழ்வை – பார்ப்பான்

மாற்றிவிட்டான் தீபாவளிக் கதையாய்!

தகுமுறையோ பிறனிறப்பைக் கூடிக்கொண் டாடுவது?

பகுத்தறிவால் ஆய்ந்தறிவாய் புனைவை! – பார்ப்பான்

பார்ப்பதெலாம் தான்பிழைக்கும் வழியை!

 

திராவிடரை அசுரரென்று பழித்தான்! – பார்ப்பான்

தமிழர்களின் பிறப்பினையே இழித்தான்!

பிறருழைப்பில்தான்செழித்தான்! பேதமைக்கே ஊட்டமிட்டான்!

நரகாசுரன் கதைபுனைந்து கொடுத்தான்! – தமிழர்

நல்வாழ்வை பண்பாட்டைக் கெடுத்தான்!

 

புத்தாடை வாங்கக்கடன் வாங்கி – ஏழை

புதைந்திடுவான் கடன்சுமையைத் தாங்கி!

மத்தாப்பு வெடியென்று பணம்கரியாய்ப் போனபின்னே

பத்தியமாய்ப் பசிதின்றே ஏங்கி – ஏழை

பதைபதைப்பான் கடன்பெருக வீங்கி!

 

தைமுதல்நாள் தமிழருக்குத் திருநாள்! – பொங்கல்

தமிழரெல்லாம் கூடிமகிழ் பெருநாள்!

பைநிறைக்கப் பார்ப்பனியம் பற்றவைத்த தீபாவளிப்

பொய்ப்புனைவை கிழித்தெறிவோம்  அறிவால்! – அதற்குப்

புதுக்கிடுவோம் பகுத்தறிவு அரிவாள்! ©