பீமா என்ற துப்புரவு தொழிலாளி புகார் கொடுப்பதற்குமுன் கர்நாடக மாநில காங்கிரஸ் MLC உகரப்பா இக்கொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.
2015 ஜூன் விசாரணை தொடங்கப்பட்டது. அவ்விசாரணையில் 548 பெண்கள் காணாமல் போனதாய் தகவல் பெறப்பட்டது. இவர்கள் மேற்கண்ட மஞ்சுநாத் கோயில் வளாகத்தில், காணாமல் போனதாய் தகவல் கிடைத்தது.
அப்போது மங்களூர் பகுதி எஸ்.பி.ஆக இருந்தவர். தமிழ்நாட்டில் பி.ஜே.பி. மேனாள் மாநிலத் தலைவராய் இருந்த அண்ணாமலை. 2015 முதல் எந்த விசாரணையும் இன்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு கொலை நடந்தாலும் பொங்கி எழும் அண்ணாமலை அப்போது என்ன செய்தார்? அவர் உடந்தையா? சாமியாரைக் காப்பாற்றியவாரா என்று கேள்விகள் எழுகின்றன.





