தொண்டு செய்து பழுத்தவரின் ரெண்டாம் பாகமே
தாகம் கொண்ட தமிழருக்கு எல்லாம் தண்ணீர் மேகமே
பகுத்தறிவு உங்க பள்ளிகூடம்
கருப்புச் சட்ட உங்க சீருட
அய்யா ஒங்க வாத்தியாரு
அய்யா உங்கள போல வேற யாரு?
ஆதி சிவன் உச்சியிலே கங்கை இருக்குதாம்,
அது தமிழ் நாட்டு மக்களோட தாகம் தீர்க்குமா?
ஏழாவது அவதாரமா ராமன் இருக்குறானாம்,
அது ஆறாவது அறிவுக்கு ஒத்து போகுமா?
மதம் பிடிச்ச மனுசனுக்கு நாடு தேவையா?
ஒரு மத யானை வாழ்வதுக்கு கூடு தேவையா?
மானமிகு அய்யாவோட மழையில் ஆடுவோம்
ஒரு மாற்று சக்தி வேண்டும் என்று ஒன்றாய் கூடுவோம்.
கருப்பு கொடியில் சிவப்ப தொட்டு ஒரு கலகம் செய்து உலகை எட்டு..
அடடா, சானத்துல புள்ளையார புடிச்சு வக்கிறான்
அந்த புள்ளையாரு தொப்பையில புள்ள பொறக்குமா?
நாக்கு மேல வேல குத்தி அய்யோ பிச்ச எடுக்குறான்
நம்ம உடன் பிறந்த தாய் மொழிய ஊமையாக்குறான்
ஆகமத்த சொல்லி சொல்லி அடிமையாக்குறான்
நம் மானமுல்ல தமிழினத்த மடமையாக்குறான்
ஆசிரியர் தலைமையில அலையென எழுந்திடுவோம்
உயர் நிலையான சிந்தனையை நிலத்தில் உழுதிடுவோம்
கருப்பு கொடியில் சிவப்ப தொட்டு ஒரு கலகம் செய்து உலகை எட்டு.
– கபிலன்
Leave a Reply