Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எழும்பூரில் இருந்து பேருந்தில் பயணிக்கும் போது எனது அருகில் அமர்ந்திருந்தவர் அவ்வப் போது கன்னத்தில் தாளம் போட்டார். இது ஆன்மியோஃபோபியா. நான் மும்பையில் இருந்தபோது இதற்கு டோஸ் கொடுத்திருக்கறேன். இங்கேதான் முக்கியமாக கொடுக்கவேண்டும்.

டிரீட்மென்ட்:

ஏரிக்கரை மாரியம்மன் என்ற கோவில் வந்ததும் மீண்டும் தாளம் போட்டார், நான் எனது வைத்தியத்தை ஆரம்பித்தேன்.

அதாவது அதன் அருகிலேயே ஆக்ஸிஸ் பேங்க் ஏ.டி. எம் இருக்கிறது. நான் எழுந்து நின்று கும்பிடு போட்டு உட்கார்ந்தேன், முதலில் அவர் ரோட்டில் பார்த்தார், பிறகு கோடாக் மஹேந்திரா ஏ.டி.எம் வர அதே போல் செய்தேன் அவருக்கு புத்தியில் உரைத்துவிட்டது. டோஸ் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

அதன் பிறகு சித்தி சித்தப்பா அத்தை மாமா விநாயகர் என பலர் தென்பட்டனர். கோவிலையும் பார்த்தார் என்னையும் பார்த்தார். ஆனால் தாளம் போடவில்லை.

சென்னையில் டோஸ் கொடுத்த முதல் தடவையே வெற்றி வெற்றி!

– சரா